உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகலேஷ்வர் கோவில் ஒரு மங்களகரமான கோவிலாக ஹிந்துக்களால் பார்க்கப்படுகிறது. இந்த கோவில் ஒரு ஏரியின் அருகில் பெரிய மதில்களால் சூழப்பட்டு முற்றத்துடன் மிடுக்குடன் காட்சியளிக்கிறது.
இந்த கோவிலில் ஐந்து அடுக்குகள் காணப்படுகின்றன. அதில் ஒரு அடுக்கு தரை மட்டத்துக்கு கீழ் உள்ளது. இங்குள்ள கடவுளை தட்சிணாமூர்த்தி என்று அழைப்பர். தட்சிணாமூர்த்தி தெற்கு திசையை நோக்கி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவிலுள்ள 12 ஜ்யோதிர்லிங்கத்தில் இதுவும் ஒன்றாகும். இங்கு கடவுளுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை மீண்டும் ஒரு முறை படைக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இது இந்த கோவிலை தவிர வேறு எங்கும் நடப்பதில்லை.
இந்த கோவிலில் ஓம்கரேஷ்வர் சிவனுக்கு சிலை உள்ளது. மஹகல் சன்னதிக்கு மேல் தான் இந்த சிவனின் கருவறை அமையப்பெற்றுள்ளது. மகாசிவராத்திரி அன்று இந்த கோவில் வளாகத்தில் பெரிய பொருட்காட்சி நடைபெறும்.