இடார்ஸியில் அமைந்துள்ள இந்த பெந்தேகோஸ்தே தேவாலயம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்த தேவாலயமே இந்தியாவில் உள்ள பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் பெல்லோஷிப் தலைமையகமாக செயல்படுகிறது.
இதன் தலைமையின் கீழ் சுமார் 1100 தேவாலய்ங்கள் நாடு முழுவதும் பரவியுள்ளன. இந்த தேவாலயம் நாடு முழுவதும் புதிய தேவாலயங்கள் நிறுவது மற்றும் மக்கள் மத்தியில் நற்செய்தியை பரப்புவது போன்ற செய்கைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் பெல்லோஷிப்பின் கீழ் சுமார் 1100 ஆயர்கள் இறைப்பணி ஆற்றி வருகின்றனர். இந்த தேவாலயத்திற்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் மனதை இந்த தேவாலயத்தின் அழகு ஆட்கொண்டு வருகிறது. பெரும்பாலும் மக்கள் தொலைதூரம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் இருந்து இடார்ஸிக்கு வருகை புரிந்து இந்த தேவாலயத்தில் வழிபட்டுச் செல்கின்றனர். இந்த தேவாலயம் நாடு முழுவதும் இடார்ஸியின் பெயரைப் பரப்புவதில் பெரும் பங்கு வகிக்கிறது.