தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இந்த நாகூர் கடற்கரை அமைந்துள்ளது. நாகூர் நகரம் இந்த கடற்கரைக்காகவே பிரசித்தி பெற்றிருக்கிறது. உள்ளூர் நகராட்சியால் இந்த கடற்கரை வெகு அழகாக பரமாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நல்ல பிக்னிக் ஸ்தலமாக விளங்கும் இந்த கடற்கரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு உள்ளூர் மக்களும் சுற்றுலாப்பயணிகளும் பொழுதுபோக்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
குதிரைச்சவாரி போன்ற பொழுது அம்சங்களும் இங்கு உள்ளன. இந்த கடற்கரையிலிருந்து கடலை பார்த்து ரசிக்கும் அனுபவம் நிச்சயம் மனதுக்கு உவகையூட்டும் என்பதில் ஐயமே இல்லை.
கடற்கரையில் உள்ள பல உணவு அங்காடிகளில் பல சுவையான தின்பண்டங்களையும் பயணிகள் ருசிக்கலாம். ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த கடற்கரையில் வெளிநாட்டுப்பயணிகளையும் அதிகம் பார்க்க முடியும். ஹஸரத் மியான் தர்க்கா எனும் மசூதியும் இந்த கடற்கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது.