125 வகையான மரங்களையும் செடிகளையும் உள்ளடக்கிய இந்த அரண்மனையில் உள்ள வனவியல் பூங்கா 1800ல் பிஜோய் சந்த் மஹாதாப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இங்கு அமர்ந்து கணிணியில் அலுவலக வேலைகளையும், புத்தகங்கள் படிப்பதையும் பலர் விரும்புகிறார்கள்.
பர்தமானின் முகாலயர்களின் ஆட்சிக்கு எதிராக போராடிய ஷேர் ஆஃப்கானின் கல்லறை இங்கு உள்ளது. 1610ல் நிகழ்ந்த போருக்குப் பின் அவர் நினைவாக இக்கல்லறை எழுப்பப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள்.
வனவிலங்கு அலுவலகத்திற்கு உட்பட்ட ரமணா பூங்கா இயற்கை அழகு நிரம்பியதாகவும், முதலை, மான்கள், புலிகள் போன்ற வனவிலங்குகளின் சரணாலயமாகவும் விளங்குகிறது.
புகைப்படக்காரர்களின் சொர்க்கபுரியாக திகழும் இவ்விடத்திற்கு புலம்பெயர் பறவைகளும் ஏராளமாக வருகின்றன....
காளி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாகும். காளியின் கல் சிலையை பிரதான தெய்வமாக கொண்டுள்ள இக்கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருகை தருவதால் வளாகத்தினுள்ளேயே எல்லா வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.