பாதால் மஹால் தர்வாஸா என்ற இந்த ஒற்றை நுழைவாயில் எந்த மாளிகை அல்லது மாஹாலுக்கும் நுழைவாயிலாக இல்லை. ஜாமா மசூதிக்கு அருகில், சாந்தேரியின் மையமான சுற்றுலாத் தலமாக இந்த வரலாற்றுத் தலம் உள்ளது.
15-ம் நூற்றாண்டில், மாளவ அரசராக இருந்த மெஹ்மூத் ஷா கில்ஜி என்பவரால், அவர் பெற்ற பெரும் வெற்றியின் நினைவாக, இந்த ஆளுமை நிறைந்த நுழைவாயில் கட்டப்பட்டது. விஸ்தாரமான சிற்பங்கள் மற்றும் சிறந்த கலைநயம் கொண்ட இந்த மஹால் 100 அடி உயரம் கொண்ட இடமாகும்.
இந்த நுழைவாயில், உச்சிப்பகுதியை வளைவாகவும் மற்றும் இரண்டு உயரமான பாதுகாப்பு கோபுரங்களை இரண்டு புறங்களிலும் கொண்டதாகவும் உள்ளது. வளைந்த உச்சிப்பகுதிக்கு இடையிலான இடைவெளியை மற்றொரு வளைவு தொடாந்து வந்து, இந்த நுழைவாயிலின் முனை வரை கொண்டு வருவதே இதன் சிறப்பம்சமாகும்.
இம்மாநிலத்திற்கு வரும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் இடமாகவும், அவர்களை சிறந்த முறையில் கௌவரவிக்கும் இடமாகவும் இந்த நுழைவாயில் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications