பேட்வா நதிக்கரைகளில் உள்ள அழகிய கிராமம் தான் தியோகார். பசுமை போர்வையால் போர்த்தப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கிராமமாக இது உள்ளது. இது சாந்தேரியிலிருந்து 71 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமம் புகழ் பெற்ற மத வழிபாட்டுத் தலமாகும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் பலவற்றைக் கொண்ட இடமாக தியோகார் உள்ளது. இவற்றில் மிகவும் முக்கியமானது 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தசாவதார விஷ்ணு கோவிலாகும்.
குப்தர்கள் காலத்தைச் சேர்ந்த இந்த கோவிலின் கட்டிடக்கலை பிரமிக்க வைக்கும் தன்மையை உடையதாகும். இங்கிருக்கும் வராஹா கோவில் அதன் தனித்தன்மைக்காக மிகவும் புகழ் பெற்றுள்ள இடமாகும்.
12-ம் நூற்றாண்டில் கீர்த்தி வர்மன் என்ற அரசரால் கட்டப்பட்ட கீர்த்தி துர்க் கோட்டையும் இந்த கிராமத்தின் மற்றுமொரு புகழ் பெற்ற இடமாகும். தியோகார் கிராமத்தில் சமண கற் சிற்பங்களும் எண்ணற்ற அளவுகளில் காணப்படுகின்றன.
இங்கிருக்கும் மஹாவீர் வனவிலங்குகள் சரணாலயம் அதன் வளமான வன வாழ்க்கை, மாறுபட்ட விலங்குகள் மற்றும் தாவரங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும்.



Click it and Unblock the Notifications