சாந்தேரியிலிருந்து 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள கவர்ச்சியான அரண்மனை தான் கோஷாக் மஹால் உள்ளது. இந்த அரண்மனையை 1445-ம் ஆண்டில் மாள்வா பகுதியின் சுல்தானாக இருந்த மெஹ்மூத் ஷா கில்ஜி என்பவர் கட்டினார்.
கால்பி யுத்தத்தில், மெஹ்மூத் ஷார்கி என்ற சுல்தானை வெற்றி பெற்றதன் அடையாளமாக மெஹ்மூத் ஷா கில்ஜி இந்த கோட்டையை கட்டினார். கோஷாக் மஹால் சதுர வடிவில், வளைவான நுழைவாயில்களைக் கொண்டிருக்கும் அற்புதமான அரண்மனையாகும்.
இந்த அரண்மனையில் ஒரே அளவு இடைவெளியில் நான்கு மேன்ஷன்கள் கட்டப்பட்டுள்ளன. பல்வேறு பாதைகள் மற்றும் பிராகார வழிகள் இந்த அறைகளை இணைக்கும் வகையில் உள்ளன.
இந்த அரண்மனையின் சிறப்பான வடிவமைப்புகள் இன்றளவில் இல்லாத போதும், இங்கிருந்த அந்த சிறந்த வடிவமைப்புகளின் மீதங்கள் இந்த வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன.
கோஷாக் மஹாலை உள்ளூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மணற்கற்களால் கட்டியுள்ளனர். இதன் மேன்ஷன்கள் அனைத்துமே ஒரே வடிவமைப்பில் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது தான் இதன் கட்டிடக்கலை சிறப்பாகும்.
இந்த மாளிகை மூன்று முழுமையான தளங்கள் மற்றும் ஒரு முழுமையடையாத நான்காவது தளம் ஆகியவைகளுடன் இன்று காட்சி தருகிறது.



Click it and Unblock the Notifications