வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில், போபால் சிற்றரசின் தலைநகராக சிறிது காலம் இருந்து வந்தது. தற்போது இந்த நகர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் போபால் பெராசியா சாலைக்கு அருகில், போபாலிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இஸ்லாம் நகரில் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கலாம். அதன் மூலம் இந்த இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில் எவ்வளவு சிறப்புற்று விளங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.
இஸ்லாம் நகரின் இயற்பெயர் ஜெகதிஷ்பூர் ஆகும். ஒரு காலத்தில் இஸ்லாம் நகரை இரஜபுத்திர அரசர்கள் ஆண்டு வந்தனர். ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் நகரின் மீது படையெடுத்து, இந்த பகுதியை தனது ஆட்சிக்குட்படுத்தினார்.
பின் இந்த பகுதியை இஸ்லாமியர்களின் நகரம் என்று அறிவித்து இந்த பகுதிக்கு இஸ்லாம் நகர் என்று பெயர் மற்றினார்.
அதோடு அவர் போபாலை ஒரு சிற்றரசாக மாற்றி அதற்கு இஸ்லாம் நகரைத் தலைநகரமாக்கினார். ஆனாலும் அவரால் சிலகாலம் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது. 1923 ஆம் ஆண்டு நிசாம் உல் முல்க் என்ற மன்னர், இஸ்லாம் நகரைக் கைப்பற்றி தனது ஆட்சிக்குட்படுத்தினார்.
இறுதியாக இஸ்லாம் நகர் 1806 முதல் 1817 வரை சிந்தியர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. தற்போது இஸ்லாம் நகர் போபால் மாவட்ட நிர்கவாத்தின் கீழ் இருக்கிறது. இஸ்லாம் நகரைச் சுற்றிலும் ஏராளமான தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் அமைந்திருக்கின்றன.
இஸ்லாம் நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்!
பண்டைய வரலாற்று நினைவு மண்டபங்கள் மற்றும் அரண்மனைகள் ஆகியவை இஸ்லாம் நகரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும் சாமன் மகால், ராணி மகால் மற்றும் கோண்ட் மகால் போன்ற அரண்மனைகள் சுற்றலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள் ஆகும்.
போபாலில் இறங்கி பேருந்துகள் அல்லது ஆட்டோ ரிக்சாக்கள் மூலம் இஸ்லாம் நகரை மிக எளிதாக அடையலாம். மேலும் பயணிகளின் வசதிக்காக இஸ்லாம் நகரில் பல நல்ல உணவு விடுதிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இஸ்லாம் நகருக்கு சென்று வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.