அரண்மைனை தோட்டம் என்று அழைக்கப்படும் சாமன் மகால் 1715ல் ஆப்கானிஸ்தானிய தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவரால் கட்டப்பட்ட ஒரு முக்கிய அரண்மனையாகும்.
இவர் சிறிது காலமே இஸ்லாம் நகரை ஆண்டாலும், பல ஏராளமான நினைவுச் சின்னங்களை இஸ்லாம் நகரில் எழுப்பி இருக்கிறார். அந்த வகையில் அவர் கட்டிய சாமன் மகால் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது.
மணல் கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் சாமன் மகால், சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய ஒன்றாகும். இந்த அரண்மனை சீஷல் மகால் என்ற ஒன்றையும் கொண்டிருக்கிறது.
இந்த மகலின் வாயில் 12 கதவுகளைக் கொண்டிருக்கும். இந்த மகாலில் இருக்கும் மிக முக்கிய அம்சம் இதன் நடுவில் அமைந்திருக்கும் அழகிய தோட்டம் ஆகும். இந்த தோட்டத்தின் நடுவில் இருக்கும் நீரூற்றுகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
இந்த அரண்மனையின் அமைப்பு மற்றும் இந்த அரண்மனையில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள், முகலாய மற்றும் மால்வா மன்னர்களில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
இந்த அரண்மனையின் அழகை ரசிப்பதற்கும், இந்த அரண்மனையின் நடுவில் அமைந்திருக்கும் அழகியத் தோட்டத்தைப் பார்த்து ரசிப்பதற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றன