இஸ்லாம் நகரில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் முக்கிய அம்சம், இஸ்லாம் நகர் கோட்டை ஆகும். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் இந்த கோட்டைக்கும், இஸ்லாம் நகர் உருவானதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவர் கிபி 1715ல் இஸ்லாம் நகர் கோட்டையை நிறுவனார்.
எனினும் 1723 ஆம் ஆண்டில் நிஸாம் உல் முல்க் என்பவர் முகமது கானை வீழ்த்தி இஸ்லாம் நகர் கோட்டையைக் கைப்பற்றினார். மேலும் நிஸாம் உல் முல்க், முகமது கானை வற்புறுத்தி, இந்தக் கோட்டையின் தளபதியாக மாற்றினார்.
இறுதியாக 1806 முதல் 1817 வரை இந்தக் கோட்டை சிந்தியர்களின் கைகளில் இருந்தது.தற்போது இந்த கோட்டை போபால் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.
இந்தக் கோட்டை அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டது. பண்டை சிற்பக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இப்போது விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் சில பகுதிகள் அழிந்துவி்ட்டாலும், பண்டைய காலத்தில் இந்த கோட்டை எந்த அளவிற்கு வளமாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.