ஊர்வசி நதிக்கரையில், இன்றைய சாந்தேரியிலிருந்து 19 கிமீ தொலைவில் பழைய சாந்தேரி அமைந்துள்ளது. இந்த இடம் புத்தி சாந்தேரி என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகிறது.
வரலாறு மற்றும் வேதகாலங்களுடன் தொடர்புடைய இந்த நகரம், நமது இதிகாசங்கள் மற்றும் வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பெற்றுள்ள இடமாகும். சமண மத கலாச்சாரத்தால் புகழ் பெற்ற பழைய சாந்தேரியில் முதன்மையானவர்களாக பர்வார் ஜெயின் பரிவினர் இருந்து வந்தனர்.
இந்த இடத்தில் 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில சமண மத கோவில்களும் உள்ளன. சமண சமய மக்களால் முக்கியமான புனிதத் தலமாக கருதப்படுவதால், இந்நகரத்தை நோக்கி நாடு முழுவதுமுள்ள சமண சமய மக்கள் பெருமளவில் வருவது வழக்கம்.
பழைய சாந்தேரியின் கட்டிடக்கலை மற்றும் பிற சின்னங்கள் இன்றும் கூட அந்த காலத்தில் நிலவி வந்த சிறப்பு மிக்க கட்டிடக்கலை பாணிகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளன.



Click it and Unblock the Notifications