12 அடி உயரமுள்ள உரையாற்றும் மேடையுடன் அமைக்கப் பட்டுள்ள கவர்ச்சியான நினைவுச்சின்னமாக ஷாஸாதி கா ரௌஸா உள்ளது. இந்த நினைவுச்சின்னம் பரமேஸ்வர் குளத்திற்கு அருகில் உள்ளது.
இந்த அரண்மனையின் வெளிப்புற சுவற்றில் உயரமான முதல் தளமும், சற்றே உயரம் குறைந்த இரண்டாவது தளமும் உள்ளன. இந்த இரண்டு தளங்களின் முனைகளிலும் தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்ட வளைந்த வடிவமுடைய அடைப்புகளும் உள்ளன.
இந்த வடிவமைக்களின் உட்பகுதிகளில் ஒற்றை தளங்களும், அவற்றின் ஒற்றை அறைகள் சதுர வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவுச் சின்னத்தில் 5 குவி மாடங்கள் முதலில் இருந்தன ஆனால் அவை இன்று அழிந்து விட்டன.
15-ம் நூற்றாண்டில் சாந்தேரியின் ஆளுநராக இருந்த ஹக்கீமினால் அவருடைய மகள் மெஹ்ருன்னிஸாவிற்காக கட்டப்பட்ட, கல்லறையாகவே இந்த அமைப்பு இருந்து வந்தது.
அவர் ஹக்கீமின் படைத்தளபதியின் மீது காதல் வயப்பட்டிருந்தார். ஆனால், ஹக்கீம் இதற்கு ஒப்புதல் அளிக்காததால் இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டுள்ள இடத்தில் இந்த இளம் காதலர்கள் மரணமடைந்தனர்.
அதன் பின்னர், ஹக்கீம் தன்னுடைய மகளை இந்த இடத்தில் புதைத்து விட்டு, அவருடைய நினைவாக இந்தநினைவுச் சின்னத்தை எழுப்பினார்.



Click it and Unblock the Notifications