சுமார் 1,100 சதுர கி.மீ. பரப்பளவில் தயா நதியின் வாயிலில் அமைந்துள்ளது சில்கா ஏரி. இந்த உப்பு நீர் ஏரி நன்செய்நிலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது. காஸ்பியன் கடல், ஈரான், ரஷ்யா மற்றும் சைபீரியா போன்ற இடங்களில் இருந்து குளிர் காலத்தில் பல பறவைகள் இங்கே இடம் பெயரும்.
இடம் பெயரும் காலத்தில் சுமார் 205 பறவை வகைகளை இங்கே காணலாம். இதில் 97 வகைகள் கண்டம் விட்டு இடம் பெயரும் பறவைகளாகும்.
சில்கா ஏரியில் சிறிய தீவுகள் பல உள்ளன. இந்த தீவுகளுக்கெல்லாம் ஒரு முறை சென்று வந்தால் போதும், வாழ்நாள் முழுவதும் அதனை மறக்கவே மாட்டீர்கள். பறவைகள் தீவு, தேனிலவு தீவு, பரிகுத் தீவு, ப்ரேக்பாஸ்ட் தீவு, மலுத் தீவு, நிர்மல்ஜரா தீவு மற்றும் நலபானா (நாணல் தீவு) போன்றவைகள் இங்கே காணப்படும் முக்கிய தீவுகளாகும்.
காளிஜெய் தீவில் காளிஜெய் தேவிக்காக ஒரு கோவில் ஒன்று உள்ளது. அதனால் இந்த தீவு ஹிந்துக்களின் புனித ஸ்தலமாக விளங்குகிறது. எனவே வருடம் முழுவதும் இந்த தீவில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழியும். மகர சங்கராந்தி திருவிழா இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஏரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் ரிஜ்ஹன்சா ஏரி உள்ளது. இந்த தீவில் இருந்து கடற்கரையின் அகலப் பரப்பு காட்சியை கண்டுகளிக்கலாம். சில்காவின் அழகை கண்டு களிக்க சட்படா, பளுகோன், ரம்பா மற்றும் பர்குல்லில் இருந்து படகு சவாரியில் ஈடுபட வேண்டும்.