பஞ்ச் கேதார்களில் ஒன்றான துங்கநாத் மந்திர், உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகவும் போற்றப்படுகிறது. இது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3680 அடியில், துங்கநாத் மலைத்தொடரில் அமையப்பெற்றுள்ளது.
இந்துப் புராணங்களின் படி, இந்து காப்பியமான மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
துங்கநாத் என்பதன் சொல்லர்த்தம் ‘சிகரங்களின் கடவுள்’ என்பதாகும். வட இந்திய பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் சிவபெருமானின் கரம் வழிபடப்படுவதாக ஐதீகம். கோயிலின் நுழைவுவாயிலில், சிவனின் வாகனமாக இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நந்திக் காளையின் கல்லாலான சிலை ஒன்றைக் காணலாம்.
புகழ் பெற்ற இந்து முனிவர்களான பைரவ் மற்றும் வியாஸ் ஆகியோரின் திருவுருவச்சிலைகள், பாண்டவர்களின் சிலைகளுடன் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, வெவ்வேறு தெய்வங்களின் சிறு சிறு சந்நிதிகளும் கோயிலைச் சுற்றி காணப்படுகின்றன. நவம்பர் முதல் மார்ச் வரை, இங்கு கடும் பனிப்பொழிவு இருக்குமதனால், இச்சமயத்தில் கோயில் மூடப்பட்டிருக்கும்.



Click it and Unblock the Notifications