பர்சூர் எனும் இந்த சிறிய, நிசப்தம் கவிழ்ந்த கிராமம் தண்டேவாடாவுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது. ஒரு காலத்தில் இந்த பர்சூர் கிராமமானது ‘கோயில்கள் மற்றும் குளங்களின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் விளங்கியிருக்கிறது. 147 கோயில்கள் மற்றும் அவற்றுக்கான தீர்த்தக்குளங்கள் இந்த நகரில் அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது.
காலப்போக்கில் தனது பெருமையை இழந்து, நூற்றாண்டுகள் பல கடந்து, அந்த கோயில்களின் சிதிலங்கள் மட்டுமே காணப்படும் ஒரு வரலாற்று அடையாளமாக இந்த ஸ்தலம் இன்று நம் முன்னர் காட்சியளிக்கிறது.
இந்த சிதிலங்களை பார்க்கும்போது அந்த மஹோன்னதக்கோயில்கள் வீற்றிருந்த காலத்தை நோக்கி நம் உணர்வுகள் பயணிக்கின்றன. இங்குள்ள கோயில் வளாகங்களில் மம்மா-பஞ்ஜா, சந்திராதித்யா கோயில் மற்றும் பட்டிஸா கோயில் போன்றவை குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கின்றன. ஒரு பிரம்மாண்டமான விநாயகர் சிலையையும் இங்கு பார்க்கலாம்.