தண்டேவாடா மாவட்டத்தில் தவறாமல் பார்க்க வேண்டிய அம்சங்களில் ஒன்றாக இந்த கம்மவாடா நினைவுத்தூண்கள் பிரசித்தி பெற்றுள்ளன. தண்டேவாடாவிலிருந்து 14 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கம்மவாடா கிராமத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும் கல் தூண்களை பார்க்கலாம். இவை ‘நினைவுத்தூண்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் இப்பகுதியில் வசித்த மூத்த குடிகள் இறந்து போன தங்கள் உறவினர்களின் ஞாபகச்சின்னங்களாக இந்த கல் தூண்களை உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.