நந்தபூர் எனும் இந்த கிராமம் ஒரு காலத்தில் ஜெய்பூர் பகுதியின் தலைநகராக விளங்கியிருக்கிறது. இது செமிலிகுடா எனும் இடத்திலிருந்து 14 கி.மீ தூரத்திலும் படாங்கி எனும் இடத்திலிருந்து 293 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த ஒரு இடமாக இது பிரசித்தி பெற்றிருக்கிறது ஜைனம் மற்றும் சக்தி வழிபாடு போன்றவை இப்பகுதியில் நிலவி வந்தததற்கான ஆதாரங்களாக இங்கு சில தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் 32 படிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பத்ரிஸா சிம்மாசனா எனும் அரியணை அமைப்புக்காக இந்த நந்தபூர் புகழ் பெற்றிருக்கிறது. இந்த அரியணை விக்கிரமாதித்யா மன்னரால் கட்டப்பட்டிருக்கிறது.
நந்தபூர் கிராமத்தை சுற்றிலும் பல்வேறு ஓடைகளும் பாய்கின்றன. இந்த புராதன கிராமத்தின் வடக்கு முனையில் அமைந்துள்ள இரண்டு பிரம்மாண்ட தூண் அமைப்புகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.
இந்த தூண்களில் ஒன்றில் அழகிய சிற்பச்செதுக்கல்களும் மற்றொன்றில் ஒரு யானையின் உருவமும் காணப்படுகின்றன. இந்த தூண் அமைப்பை அடுத்து இன்னும் சிறிது தூரம் சென்றால் சர்வேஸ்வர் கோயில் ஒன்று உள்ளது.
இதில் சில கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகின்றன. இவை யாவுமே இந்த கிராமத்தின் புராதனமான வரலாற்றுப்பின்னணிக்கு சான்றுகளாக அமைந்திருக்கின்றன.