துணிகர சாகச முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த கஜ்ஜார் மிகவும் ஏற்ற இடமாக பிரசித்தி பெற்றுள்ளது. கலாடோப் எனும் இடத்திலிருந்து 3 நாட்கள் மலையேற்றம் செய்து இந்த இடத்தை அடையலாம்.
சிரமமான 3 நாள் பயணத்திற்கு பின்பு பயணிகளை வெண்பனி படர்ந்த பிரதேசங்கள் வரவேற்கின்றன. இங்கு குதிரைச்சவாரி, புகைப்படம் எடுத்தல் போன்ற பொழுதுபோக்குகளில் பயணிகள் ஈடுபடலாம்.
இப்பகுதியில் கடும்பனிப்பொழிவு நிலவுவதால் உறைந்த போன ஓடைகளின் மீது அமைந்திருக்கும் பனி போர்த்திய பாலங்கள் வித்தியாசமான தரிசனத்தை அளிக்கின்றன. இது வேறு உலகம் எனும் பிரமிப்பிலிருந்து பயணிகள் விடுபடுவதே சிரமம்தான். கடும் குளிர் நிலவும் பிரதேசம் என்பதால் கனமான கம்பளி உடைகளோடு பயணிப்பது அவசியம்.