ஆக்ரா – தாஜ் மஹாலுக்கும் அப்பாற்பட்ட மஹோன்னத வரலாற்று மாநகரம்!
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வீற்றிருக்கும் நகரம் - ஆக்ரா என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். வட இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் டெல்லியிலிருந்து 200 கி.மீ தூரத்தில் வீற்றிருக்கும் இந்த புராதன நகரத்தில் தாஜ்மஹால் மட்டுமல்லாது இன்னும் இரண்டு யுனெஸ்கோ சர்வதேச பாரம்பரிய ஸ்தலங்களும்......
அஹமதாபாத் – வளர்ந்து வரும் நவீனப்பெருநகரம்
முரண்களின் நகரம் என்று சொல்லும் அளவுக்கு ஒன்றுக்கொன்று எதிரான பல அம்சங்களை அஹமதாபாத் நகரம் கொண்டுள்ளது. ஒரு புறம் பொருள் ஈட்டுவதை குறிக்கோளாக கொண்ட குஜராத்தி வணிகர்கள் உதித்த பூமி என்றால் மறு புறம் பொது நலனை வலியுறுத்திய காந்திஜியும் இப்பகுதியில் தோன்றியுள்ளார் என்பதும் ஒரு வியப்புக்குரிய......
அஜந்தா – உலக பாரம்பரிய சின்னம்
கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த உலகப்புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான ‘அஜந்தா குடைவறைக்கோயில்கள்’ புராதன இந்தியாவில் ஏக காலத்தில் தழைத்தோங்கியிருந்த ஹிந்துமரபு, புத்த மரபு மற்றும் ஜைன மரபு போன்றவற்றின் ஆதாரச் சான்றுகளாக காலத்தால் அழியாமல் நின்று ஆயிரம் மௌனக் கதைகள் கூறுகின்றன.......
அல்மோரா - பேரானந்தம் தரும் சுற்றுலா அனுபவம்!
உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் ஒரு குதிரை சேணம் போன்ற வடிவிலான மலைமுகட்டில் அமைந்துள்ள மலைவாழ்விடமான அல்மோரா புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. சுயல் மற்றும் கோசி நதிகளுக்கு இடையே 5 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இடம் அல்மோரா. கடல் மட்டத்திலிருந்து 1651 மீட்டர் மேலே அமைந்துள்ள......
அலாங் - பள்ளத்தாக்குகளுடன் சேர்ந்து விளையாடுவோம்!
அருணாச்சல பிரதேசம் மேற்கு ஷியாங் மாவட்டத்தில் மலைகளுக்கு மத்தியில் பல்வேறு சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஒரு அழகிய நகரம் அலாங் ஆகும். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரம் யொம்கோ மற்றும் ஸிபு என்கிற இரண்டு ஆறுகளின் கரைகளில் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆறுகளும்......
அம்ராவதி - தேவாதி தேவர்களின் நகரம்!
அம்ராவதி எனும் பெயருக்கு அமரத்துவம் பெற்ற தேவர்களின் நகரம் என்பது பொருளாகும். இது மஹராஷ்டிரா மாநிலத்தின் வட எல்லையின் மையத்தில் அமைந்துள்ளது. தக்காண பீடபூமியில் அமைந்திருக்கும் இந்த நகரம் டப்பி சமவெளியில் இடம் பெற்றிருக்கிறது. இதன் கிழக்குப்பகுதியில் சில இடங்கள் வார்தா பள்ளத்தாக்கிலும்......
அந்தர்கங்கே - சாகசத்தின் எல்லை
சாகசப் பயணம் செல்வதை உயிர்மூச்சென கொண்டிருக்கும் வீரர்களுக்கு அந்தர்கங்கே கண்டிப்பாக ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். அந்தர்கங்கே என்ற பெயர் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்திற்கு கிழக்கே அமைந்திருக்கும் குன்றுகளில் எந்த காலத்திலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஓடை நீரை குறிக்கிறது. அந்தர்கங்கே......
அரிடார் - எல்லையில்லா ஆனந்த அனுபவம்!
நில அமைப்பு வரலாற்றின் பார்வையில்... அரிடாரின் முக்கியத்துவம், 1904 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய திபெத் வர்த்தக மாநாட்டின் பின்னர் மிகவும் உயர்ந்தது. இதன் பின்னர், புத்தம் புதிய சாலைகள் ஆங்கிலேயர்களால், போடப்பட்டன. கலாச்சாரம் மற்றும் அரிடாரின் பாரம்பரியம் ஏனெனில், இவ்விழா முற்றிலும் சாகச......
அதிரப்பள்ளி – இந்தியாவின் நயாகரா
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் முகுந்தாபுரம் தாலுக்காவில், திருச்சூரிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் கொச்சியிலிருந்து 70 கி.மீ தூரத்திலும் அதிரப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது.தென்னிந்தியாவின் மிகப்பிரசித்தமான நீர்வீழ்ச்சிக்கும் ரம்மியமான வனப்பகுதிகளுக்கும் இந்த அதிரப்பள்ளி புகழ் பெற்று......
ஆலி - உலகப் புகழ் பெற்ற பனிச்சறுக்கு உலகம்!
உலகம் முழுவதுமுள்ள சுற்றுலாப் பயணிகள் பனிச்சறுக்கு சாகசம் செய்து விளையாட ஏற்ற அழகிய சுற்றுலாத் தலம் ஆலி! கடல் மட்டத்திலிருந்து 2800 மீ உயரத்தில் உள்ள ஆலி, அங்குள்ள ஓக் மரங்களை கொண்ட சரிவுகள் மற்றும் பசுமையான ஊசியிலைக்காடுகளுக்காக மிகவும் புகழ் பெற்ற இடமாகும். உள்ளூர்வாசிகளின் நம்பிக்கைப் படி ஆதி......
பாந்தவ்கார் - புலிகளை காதலுடன் சந்தியுங்கள்!
இயற்கையின் மத்தியில்! ஒரு பரந்த பல்லுயிர் பெருக்கத்தின் காரணமாக, பாந்தவ்கார் 1968-ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இந்த இடம் இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற புலிகள் சரணாலயங்களில் ஒன்றாகும். மேலும் இந்தியாவிலேயே இங்குதான் அதிகமாக புலிகள் வசிக்கின்றன. இங்கு புலிகளை தவிர பல அரிய வகை வன......
பந்திபூர் – காட்டுயிர் அம்சங்களுடன் ஒரு சந்திப்பு
பந்திபூர் வனப்பாதுகாப்பு சரகம் இந்தியாவிலேயே பிரசித்தமான புலிகள் சரணாலயமாக அறியப்படுகிறது. இங்குள்ள புலிகளின் எண்ணிக்கை 70-க்கும் மேல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏறக்குறைய 900 ச.கி.மீ பரப்பளவுக்கு பரவி காணப்படும் இந்த ‘புலிகள் பாதுகாப்புத்திட்ட வனப்பகுதி’ கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர்......
பத்ரா - பசுமைச்சொர்க்கம்
பத்ரா காட்டுயிர் சரணாலயத்துக்காக இந்த பத்ரா சுற்றுலாஸ்தலம் பிரசித்தமாக அறியப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த காட்டுயிர் சரணாலயம் சமீபத்தில் புலிகள் பாதுகாப்புத் திட்டத்திற்கான வனப்பகுதியாகவும்......
பரத்பூர் - பறவைகளோடு நெருங்கிப் பழகுங்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் கிழக்கு வாசலாக பிரபலமாக அறியப்படும் பரத்பூர் நகரம் பரத்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த தொன்னலம் வாய்ந்த நகரம் சுராஜ் மால் மகாராஜவால் 1733-ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. பரத்பூர் நகரம் ராமபிரானின் சகோதரரான பரதரின் பெயராலேயே பரத்பூர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.......
பாவ்நகர் - குஜராத்தின் வர்த்தக நகரம் !
குஜராத்தில் இருக்கும் முக்கியமான வர்த்தக நகரங்களில் பாவ்நகரும் ஒன்றாகும். பாவ்நகர் பருத்தி பொருட்கள் தொடர்பான வர்த்தகத்திற்கு புகழ்பெற்றது. இதுமட்டுமல்லாமல், கடல் சார் வர்த்தகம், மதிப்பு மிக்க கற்கள் மற்றும் நகை வியாபாரத்திற்கும் பெயர்பெற்றது பாவ்நகர். வரலாறு 1723 ஆம் ஆண்டு, பவ்சின்ஜி கோஹில்......
பீமேஸ்வரி - சாகசக்காரர்களின் புகலிடம்
சாகசக்காரர்களுக்கும், இயற்கை காதலர்களுக்கும் விருப்பமான சுற்றுலா தலமாக மாறி வரும் அழகிய சிறு நகரம் பீமேஸ்வரி. இது பெங்களூரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெகிதாத்தூவுக்கும், ஷிவனசமுத்திர அருவிக்கும் இடையே காண்போரை சொக்க வைக்கும்படி காட்சியளிக்கும் இதன்......
புபனேஷ்வர் – மஹோன்னத கோயிற்கலை அம்சங்கள் ஜொலிக்கும் அபூர்வ நகரம்!
ஒடிஷா மாநிலத்தின் தலைநகரமான புபனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் முக்கியமான சுற்றுலா நகரம் எனும் அடையாளத்துடன் கம்பீரமாக வீற்றிருக்கிறது. மஹாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. வரலாற்று காலத்தில் கலிங்க தேசம் என்று அழைக்கப்பட்ட இந்த பிரதேசம் வெகு உன்னதமான......
புஜ் – செந்நாரைகளின் ஓய்விடம்
ஆழ்ந்த சரித்திரப் பின்னணியைக் கொண்டிருக்கும் நகரமான புஜ், கட்ச்சின் தலைமைச் செயலகமாகவும் விளங்குகிறது. இந்த நகரின் பெயர், புஜியோ துங்கார் என்ற பெயரில் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையின் பெயரை அடைமொழியாகக் கொண்டு வழங்கப்படுகிறது. மேலும் இது புஜங் என்ற மிகப் பெரிய சர்ப்பம் வாழும்......
பிகானேர் – ராஜகம்பீரக் கோட்டைகள், கதைகள் மற்றும் பாரம்பரியத் திருவிழாக்கள்
ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிகானேர் நகரம் பாலைவன பூமியின் தங்கநிற மணற்குன்றுகள், ஒட்டகச்சண்டைகள் மற்றும் ராஜபுதன மாவிரர்களின் வீரக்கதைகள் என்று எல்லா அம்சங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இந்த பாலைவன நகரம் தார் பாலைவனத்தின் மத்தியில் ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கு எல்லையில்......
பிந்து - முழுமையான வெளியுலகச் சுற்றுலா!
இந்திய எல்லையில் இருக்கும் கடைசி கிராமம் என கருதப்படும் பிந்து, இந்திய-பூட்டான் எல்லையில் உள்ளது. இக்கிராமத்தைப் பற்றிய அனைத்து தகவல்களும் ஆச்சரியமூட்டுபவையாக உள்ளன. இங்கிருந்து பூடானுக்கு செல்லும் முயற்சியையும் பயணிகள் மேற்கொள்ளலாம். மிகவும் அழகான அவ்விடத்திற்கு செல்லும் வழியெங்கும் பச்சைப்......
பீர்- இந்தியாவின் பேராகிளைடிங் தலைநகரம்!
இமாச்சல பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் பீர் முக்கியமானது. இந்த பட்டணத்தின் பெரும்பான்மையான மக்கள் அண்டை நாடான திபெத்தில் இருந்து வந்த அகதிகள் ஆவார்கள். இவ்விடம் டீர் பார்க் இன்ஸ்டிடியூட் மற்றும் தர்மாலயா இன்ஸ்டிடியூட் போன்ற பல்வேறு இறையியல் படிப்புகளுக்கு பெயர்பெற்றது. கல்வி......
பீர்பூம் - சிவப்பு மண் பிரதேசம்!
பீர்பூம் மாவட்டம் ஜார்க்கண்ட் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இது சிவப்பு மண் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள் உள்ளன. சுடுமண் சிற்ப அமைப்புகளை இம்மாவட்டத்தின் நகரங்களில் அதிகமாக காணலாம். உள்ளூர் தொழில் அம்சங்கள் இந்த மாவட்டத்தின்......
போம்டிலா - இயற்கையின் எழில் கொஞ்சும் அலங்கரிப்பு!
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் காண வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும் போம்டிலா என்ற சிறு நகரம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கிழக்கு இமயமலைத் தொடர்களினூடாக அமைந்திருக்கும் போம்டிலா அற்புதமான சுற்றுப்புறத்தைக் கொண்டிருக்கும் நகரமாகும். இயற்கையழகு மற்றும்......
புத்காம் - புத்தம் புதிதாய் காட்சியளிக்கும் சுற்றுலாத்தலம்!
ஜம்மு & காஷ்மீரின் இளம் மாவட்டம் என்று அறியப்படும் புத்காம் மாவட்டம் ஸ்ரீ நகரில் இருந்து 1979ல் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டமானது கடல் மட்டத்திலிருந்து 5.281 அடி சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகிற்கு பேர் போன புத்காமின் புவியமைப்பு மலைபாங்கான இடங்களில் இருந்து சமவெளி வரைக்கும்......
பூந்தி – காலத்தில் உறைந்துபோன பழமையின் மேன்மை
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹடோதி பிரதேசத்தில் அமைந்துள்ள பூந்தி மாவட்டம் கோட்டா நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அலங்காரமான கோட்டைகள், அற்புதமான அரண்மனைகள் ஆகியவற்றுடன் ராஜபுதன கட்டிடக்கலை அம்சங்களை தாங்கி நிற்கும் தூண்கள், சாரங்கள் போன்ற நுணுக்கமான அமைப்புகளும் இந்த இடத்தின்......
காவேரி மீன்பிடி முகாம் - தூண்டிற்காரனின் சுகானுபவம்
சீறிப்பாய்ந்து செல்லும் காவிரி நதியின் ஊடாக, தெற்கு கர்நாடகாவின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் காவேரி மீன்பிடி முகாம் அமைந்திருக்கிறது. தேனீக்களின் இனிமையான ரீங்காரம் இடைவிடாது கேட்டுக் கொண்டிருக்கும் காவேரி மீன்பிடி முகாம் நம்முடைய அன்றாட வாழ்கையின் அலுப்பையும், வெறுமையையும் போக்கி இன்ப......
சல்ஸா – இமாலய அடிவாரத்தில் ஒரு அழகிய சிறுநகரம்!
மேற்கு வங்காள மாநிலத்தின் வடபகுதியில் இமயமலைத்தொடர்களின் அடிவார மலைகளில் இந்த சல்ஸா எனும் அழகிய நகரம் அமைந்திருக்கிறது. இது சிலிகுரி சுற்றுலா நகரத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளதோடு மட்டுமல்லாமல் ரம்மியமான தேயிலைத்தோட்டங்கள், அடர்ந்த வனப்பகுதி மற்றும் பிரமிக்க வைக்கும் ஆறுகள் போன்றவற்றை கொண்டுள்ளது.......
சம்பானேர் – உன்னத வரலாற்று சின்னங்களின் பிரமிப்பூட்டும் தரிசனம்
சவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார். சம்பக் மலரின் நிறத்தை ஒத்த தோற்றத்துடன் இந்தப்பகுதியின் பாறைகள் காணப்படுவதால் இந்தப்பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து......
சம்பை - மியான்மரின் வணிக நுழைவாயில்!
மிசோராமின் அட்சயப் பாத்திரம் என வழங்கப்படும் சம்பை, மியான்மர் மலைகளை மறைக்கும் வண்ணம் நிமிர்ந்து நிற்கும் தவறவிடக் கூடாத சுற்றுலாதளமாகும். பல வண்ண பூக்களும், வண்ணமும், வளங்களும் நிறைந்த இந்த இடத்தில் தேவதைக் கதைகளில் உள்ளதைப் போல பட்டாம்பூச்சிகளும் மிகுந்து காணப்படுகின்றன. மியான்மர் மலைகளின்......