ஜம்மு & காஷ்மீரின் இளம் மாவட்டம் என்று அறியப்படும் புத்காம் மாவட்டம் ஸ்ரீ நகரில் இருந்து 1979ல் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டமானது கடல் மட்டத்திலிருந்து 5.281 அடி சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. இதன் இயற்கை அழகிற்கு பேர் போன புத்காமின் புவியமைப்பு மலைபாங்கான இடங்களில் இருந்து சமவெளி வரைக்கும் வேறுபட்டு காணப்படுகிறது. தெற்கு மற்றும் தென்மேற்கு பக்கமாக இது மலைபாங்கானதாகவும் கிழக்கு மற்றும் வடக்கு திசையில் இது சமவெளியாகவும் உள்ளது.
பழைய காலங்களில், புத்காம் முகலாயர்கள் காஷ்மீருக்கு செல்லும் போது தங்கி செல்வதற்கான ஒரு மாபெரும் இடமாக இருந்தது. பயணிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கை பூஞ்ச் கலி வழியாக சென்றடைவர்.
இது காக் பிராந்தியத்தில் உள்ள புத்காமின் எல்லை பகுதியாகும். இம்மாவட்டத்தின் சில பிரபலமான சுற்றுலா தலங்கள் : யூஸ்மார்க், தூத்பாதர், டாஸ்மெய்டன், நில் நாக் மற்றும் தூடா குட்டி மலை முதலியன.
புல்வெளிகள் பரந்து காணப்படும் யஸ்மார்க் ஒரு பிரபலமான சுற்றுலாத்தலம் ஆகும். தூத்பாதர் அடர்ந்த காடுகள், மலைகள், மற்றும் ஒரு நீரோடையின் மத்தியில் அமைந்துள்ள மற்றொரு அழகிய இடமாகும்.
நில்னாக், சுக்னாக், புஷ்கர் நாக், கந்தக் நாக், லேன் கோல், அஜி கோல் மற்றும் மாலா கோல் முதலியன இப்பகுதியில் அமைந்துள்ள சில பிரபலமான நீரூற்றுகளாகும்.
இந்த இடமானது அதன் சமய மற்றும் வரலாற்று முக்கியவத்துவம் வாய்ந்த இடங்களான புத்காம் இமாம்பாரா, ஷேக் நூர் உத்-டின், கல்லறை, ஷியாம் தேத் கல்லறை, பாபா லத்தீஃப்-உத் தின் சமாதி சமாதி சமாதி மற்றும் ஹஸ்ரத் கங்கா பாபா ரிஷி கோவில் போன்ற தலங்களுக்காக அறியப்படுகிறது.
புத்காமை விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக எளிதில் அடையலாம். இதன் அருகிலுள்ள விமான நிலையம் ஸ்ரீ நகர் விமான நிலையமாகும்.
இது முக்கிய நகரங்களான மும்பை, சண்டிகர், தில்லி, மற்றும் சிம்லா போன்ற இந்திய நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ நகரில் இருந்து 876 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புது தில்லி விமான நிலையம் இந்த பகுதிக்கு வெளி நாட்டு பயணிகளை ஈர்க்கிறது.
புத்காம் அருகிலுள்ள ரயில் சந்திப்பு ஜம்மு தாவி ரயில் நிலையமாகும். இது பெங்களூர், தில்லி, திருவனந்தபுரம், சென்னை போன்ற மற்ற இந்திய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ நகரில் இருந்து புத்காமிற்கு நேரடி பேருந்துகள் கிடைக்கின்றன.
இப்பகுதியானது ஆண்டு முழுவதும் மிதமான காலநிலையை அனுபவிக்கிறது. இந்த இடத்தில் மிதமான கோடை மற்றும் கடுமையாக பனிப்பொழிவு உடைய கடும் குளிர்காலத்தை கொண்டுள்ளது. மழை காலங்களில் இந்த இடம் மிதமான மழையை பெறுகிறது.