புஷ்கர் நாக், புஷ்கர் கிராமத்தின் கிழக்கு பகுதியிலும் பெரோஸ்போரா மற்றும் காக் இவற்றின் மத்தியிலும் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நீருற்றாகும்.
பிரபல நம்பிக்கைக்கு ஏற்ப, காஷ்மீரி பண்டிட்டுகள் வழக்கமாக இந்து மதம் நாட்காட்டியில் ஸ்வான் மாதத்தில் இந்த நீருற்றில் “தியாவை பாத்” என்ற் பிரார்த்தனையை ஏறெடுக்கின்றனர்.
மேலும் ஆசீர்வாதம் அடைய இந்த பண்டிட்டுகள் இந்த நீருற்றில் ஸ்நானம் செய்கின்றனர். நீலமத் புராணத்தின் புராண உரையில் இந்த நீருற்றை பற்றிய ஒரு குறிப்பின் படி, இந்த நீருற்றீல் ஸ்நானம் செய்தால் இரவு முழுவதும் வேத பாராயணம் செய்து பெறும் நன்மைகளை கூட பெற்று விடலாம் என்று சொல்லப்படுகிறது.