கம்மம் நகரத்திலிருந்து 46 கி.மீ தூரத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நகர எல்லைப்பகுதியிலேயே வீற்றுள்ள இக்கோயிலுக்கு சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.
ஒரு மலையின் மீது கம்மம் நகரை நோக்கியவாறு இந்தக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கம்மம் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசத்தில் இக்கோயில் முக்கியமான ஆன்மீக திருத்தலமாக பெயர் பெற்று விளங்குகிறது.
தினமும் இந்த கோயிலில் வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் பருவநிலை பாராமல் விஜயம் செய்கின்றனர். வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்த கோயில் திறந்துள்ளது.
மஹாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர் இந்த கோயிலில் வீற்றுள்ளார். சிங்கத்தின் தலையும் மனித உடலும் கொண்ட இந்த கடவுள் பக்தர்களின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
எனவே இக்கோயிலில் உள்ள கடவுளுக்கு பஞ்ச நரசிம்மமூர்த்தி என்ற பெயரும் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு வெளிப்பகுதியிலும் இக்கடவுளின் சிலை யோக கோலத்தில் அமர்ந்திருப்பதுபோல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கலையம்சம் மிளிரும் கோபுர அமைப்புகள், வித்தியாசமான கோயில் பிரகாரங்கள், கோயிலைச் சுற்றிலும் கண்ணைக்கவரும் இயற்கை எழில் என்று ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த கோயில் ஸ்தலம் ஆன்மீக அம்சங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அழகுச்சின்னமாகும். ரசனை மிக்க தென்னிந்திய சுற்றுலாப்பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.



Click it and Unblock the Notifications