தேஸ்பூரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா சோனித்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 சதுர கி.மீ. பரப்பளவில் விரிந்துள்ள இந்த தேசியப் பூங்கா, தன் வடப்புற எல்லையை அருணாச்சலப்பிரதேசத்தின் பாக்குயி வனவிலங்கு சரணாலயத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
கீழ்ப்புற இமயமலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நாமேரி தேசியப் பூங்கா, பல்வேறு தாவரம் மற்றும் விலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது.
யானைகள் அதிக அளவில் காணப்படும் இப்பூங்காவில், சிறுத்தைகள், காட்டெருமைகள், கருங்கரடிகள், காட்டுப்பன்றிகள், தொப்பித்தலை குரங்குகள் ஆகியவையும் காணப்படுகின்றன.
ஹார்ன்பில்கள், ஆட்காட்டி குருவிகள், மர வாத்துகள், தேனீக்களை உண்ணும் பறவையினம் மற்றும் இன்னிசைப் பறவைகள் போன்ற பல்வேறு பறவையினங்களையும் இங்கு காணலாம்.
இப்பூங்காவில் பாயும் ஏராளமான சிற்றோடைகள் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கின்றன. மீன்பிடிப்புக்கு மிகச் சிறந்த இடமாக இருப்பதினால் இங்கு தூண்டில்கள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
நவம்பர் முதல் மே வரையிலான காலமே இப்பூங்காவிற்கு வருகை தர மிகவும் உகந்ததாகும். சுற்றுலாப் பயணிகள் சுமார் 198 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாஹத்தியிலிருந்து நேராக இப்பூங்காவிற்கு வரலாம் அல்லது முதலில் தேஸ்பூர் சென்று பின் அங்கிருந்தும் வரலாம்.



Click it and Unblock the Notifications