சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், வீரம் செறிந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரஷேகர் ஆசாத் அவர்களின் தியாகத்தை போற்றிப் பாதுகாக்கும் பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓர்ச்சாவில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடம் ஷாஹீத் சந்திரஷேகர் ஆசாத் அவர்களின் அஞ்ஞாதவாசத்தின் விரிவான தொகுப்பேயன்றி வேறொன்றுமில்லை.
விடுதலைப் போராட்டத்தின் போது பெரும்பாலானோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஆசாத் அவர்களின் ஷாகீத் ஸ்மராக், அதன் வரலாற்று முக்கியத்துவத்தினால் எண்ணிலடங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியதாகத் திகழும் ஒரு மிகச்சிறந்த சமகால நற்சாட்சி தொகுப்பாகும்.
இப்புரட்சி நாயகன், 1926-1927 –இல் நிகழந்த அவரது நாடு கடத்தல் அல்லது அஞ்ஞானவாசத்தின் போது இந்த இடத்தில் வாழ்ந்திருக்கிறார். இந்திய விடுதலையில் இவரது பங்கு கணிசமானதாகும்.
1984 ஆம் வருடத்தில், அப்போதைய இந்தியப் பிரதமரால் ஷாகீத் சந்திரஷேகர் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறந்து வைக்கப்பட்டு, இந்த நினைவகம் முற்றிலும் புதியதோர் தோற்றம் கிடைக்கப்பெற்றுள்ளது.
சந்திரஷேகர் ஆசாத்தின் போராட்டங்களை மக்கள் அறியும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நினைவகம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் நாட்டுப்பற்றை உயிர்ப்பிக்க உதவுகிறது.