லக்ஷ்மி நாராயண் கோயில், கோட்டை மற்றும் கோயில் ஆகிய இரு வகை கட்டுமானங்களின் அழகிய கலவையாக விளங்கும் அரிய கட்டுமான பாணியின் சிறப்பான உதாரணமாகத் திகழ்கிறது.
வீர் சிங் டியோ அவர்களால் 1622 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1793 ஆம் ஆண்டில் பிருத்வி சிங் அவர்களால் புனரமைக்கப்பட்ட இக்கோயில் புராணங்களில் இருந்து புனையப்பட்ட காட்சிகளை சித்தரிக்கும் மிகச் சிறப்பான சுவரோவியங்களைக் கொண்டுள்ளது.
லக்ஷ்மி நாராயண் கோயில் சிற்பங்கள், விலங்குகள் மற்றும் பூ வேலைப்பாடுகளோடு, கிருஷ்ண பகவானின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக வடிவியல் அமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிப்பாய் கலகத்திற்குப் பின்னான காட்சிகளை சித்தரிக்கும் மிகப் பிரபலமான சித்திரங்களைக் கொண்டுள்ளதாலும் இது மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. செல்வத்துக்கு அதிபதியான லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இக்கோயில் இவ்விடத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.
அழகிய தட்டையான ஓடுகள் பதிக்கப்பட்ட ஒரு பாதை இக்கோயிலை ராம் ராஜா கோயிலுடன் இணைக்கின்றது. இக்கோயிலின் மத்திய கோபுரத்தில் பதிந்திருக்கும் அழகிய கணேசர் சிலை இந்த கோயிலின் அமைப்பை மேலும் அழகுறச் செய்வதாக உள்ளது.இக்கோயிலின் கட்டுமானத்தைக் காணும் சுற்றுலாப் பயணிகள் வியப்பின் உச்சிக்கே செல்கின்றனர்.



Click it and Unblock the Notifications