ஓர்ச்சாவை ஆண்ட முந்தைய மன்னர்களின் அரச மாளிகையான ராஜா மஹால், அதீத அழகை வெளிப்படுத்தும் ஒரு உன்னதமான கட்டிடமாகும். இதன் வெளிப்புறம், முழு வளாகத்தையும் அலங்கரிக்கும் கோபுரங்களையும், உட்புறம் நிகரற்ற சுவரோவியங்களையும் கொண்டு மேன்மையுறத் திகழ்கின்றன.
பழங்கால இந்திய மண்டபங்களின் பாணியை பின்பற்றி கட்டப்பட்டுள்ள ராஜா மஹால், செவ்வக வடிவில் அமைந்து காண்போரை வியப்படைய வைக்கும் இரண்டு விசாலமான முற்றங்களைக் கொண்டுள்ளது.
அனைவராலும் வெகுவாக ரசிக்கப்படும் திவான்-இ-காஸ் என்றழைக்கப்படும் அருமையான மோடாக்கள், ராஜா மஹாலின் தனிச்சிறப்பு வாய்ந்த அம்சமாகும். கட்டுமானக் கலையின் பல்வேறு பரிமாணங்களை மிக அழகாக எடுத்துக்கூறும் இந்த அற்புதமான அரண்மனை, கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு இடமாகும்.
இந்த மஹாலின் வளாகம் நன்றாக பராமரிக்கப்பட்டு புத்துணர்வு தரக்கூடிய சுற்றுச்சூழலைக் கொண்டு காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த அற்புதமான அரண்மனையை சுற்றிப் பார்க்கும் பொருட்டு அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications