ஆற்றில் விடப்படும் கட்டுமரப்பயணம், சாகசத்தை விரும்பும் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது. ஓர்ச்சாவின் அற்புதமான நினைவுச் சின்னங்கள் மற்றும் மாசு குறைந்த சுற்றுச்சூழல் ஆகியவற்றினிடையே, பெட்வா நதி விந்திய மலைத்தொடரில் இருந்து யமுனா நதி வரை பாய்கிறது.
சுற்றுலாப் பயணிகள் இந்த நதியில் தாம் கட்டுமரப்பயணம் மேற்கொண்டு சாகசத்தின் எல்லை வரை சென்று இன்புற்றுத் திரும்புகின்றனர். ஓர்ச்சாவின் கட்டுமரப்பயணம் தண்ணீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகசங்களில் ஈடுபாடு உடையோர் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
சுத்தமான தாவரம் மற்றும் விலங்கினங்களின் இருப்போடு, சிறப்பான கட்டிடங்கள் சூழ அமைந்திருக்கும் ஓர்ச்சாவின் பெட்வா நதியின் அமைப்பு, சாகசம் நிறைந்த தண்ணீர் விளையாட்டுக்களுக்கு மிக உசிதமான ஒரு இடமாக விளங்குகிறது.
எனினும், சுற்றுலாப் பயணிகள் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களுடன் மட்டுமே இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஓர்ச்சாவின் வியத்தகு கட்டுமரப்பயணம் கண்டிப்பாக உங்கள் மனதைத் திருடி, வாழ்நாள் முழுக்க அசைபோட்டு ரசிக்கக்கூடிய ஞாபகங்களை அள்ளித் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.



Click it and Unblock the Notifications