அற்புதமான கட்டிடக்கலைக்கு மற்றொரு சான்றாக நிற்கும், ஓர்ச்சாவின் புராதனப் பெருமையின் மிச்சங்களை சுமந்து கொண்டிருக்கும் சுந்தர் மஹால், பழங்காலம் தொட்டே பிரபலமான இடமாகத் திகழ்கிறது.
காதல் மாளிகை என்றே பெரும்பாலும் அழைக்கப்படும் சுந்தர் மஹால், ஹிந்து இளவரசரான துர்பஜனுக்கும் அவரது இஸ்லாமிய காதலிக்கும் இடையே நிலவிய தீவிரமான காதலின் நினைவாகக் கட்டப்பட்டதாகும்.
ராஜா ஜுஜர் சிங்கின் மகனாகிய இளவரசர் துர்பஜன் ஒரு சரித்திர சகாப்தம் ஆவார். இவ்விளவரசர் ஒரு இஸ்லாமிய பெண்ணை நேசித்ததனால் அவரது குடும்பத்தாரின் நிராகரிப்புக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகினார்.
இத்துணை பிரச்சினைகளையும் சந்தித்த பின் இளவரசர் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் பூண்டார். முடிவில், அவரது காதலியையே கைப்பிடித்து, இந்த அழகிய அரணமனையை கட்டி அதற்கு சுந்தர் மஹால் என்றும் பெயரிட்டார்.
துர்பஜன் இஸ்லாமிய மதத்தினராலும் வழிபடப்படுகிறார். இவரது புனித சந்நிதியை தரிசிப்பதற்கென்றே இம்மக்கள் ஏராளமானோர் இங்கு வருகை புரிகின்றனர். பிரம்மாண்டமான சுந்தர் மஹால், செறிந்த கலைநயம் மற்றும் அதீத கற்பனை வளத்தின் உதாரணமாக, தனித்துவமான தோற்றப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications