இந்தியாவின் மிக முக்கியமான சரணாலயம், கென் கரியால் சரணாலயம். இந்த சரணாலயம் வேகமாக அழிந்து வரும் உயிரினமான இந்தியன் கரியாலை காப்பாற்றும் நோக்கில் தோற்றுவிக்கப்பட்டது. கரியால் என்பது ஒரு வகை முதலை இனம்.
இயற்கை எழில் கொஞ்சும் காடுகளின் மத்தியில் அமைந்திருக்கும் இந்தச் சரணாலயத்தில், கென் ஆறு ஓடுகிறது. இந்த ஆறு 45 கிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது. இந்தச் சரணாலயத்தில், குதார் ஆறும், கென் ஆறும் சந்தித்துக் கொள்கின்றன.
1985 ஆம் அண்டு பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்ட இந்த சரணாலயத்தில், கரியல் எனும் முதலை வகை விலங்கினைத் தவிர்த்து, 6 மீ நீளம் வரை வளரக்கூடிய பல ஊர்வன விலங்குகளும் உள்ளன.
சரணாலயத்தை ஒட்டியிருக்கும் ஆற்றங்கரையில் சிங்க்காரா, சீத்தல், போன்ற மான் வகைகளும், வைல்டு போர் போன்ற பன்றி வகைகளையும், ப்ளூ புள் போன்ற விலங்கின வகைகளையும் காண முடியும்.
குழந்தைகளை அழைத்துக்கொண்டு இங்கு சுற்றுலா செல்ல வேண்டும். குழந்தைகள் இங்கிருக்கும் விலங்கினங்களை விரும்பி ரசிப்பதோடு, அது குறித்த தகவல்களையும் கற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது. தினசரி, காலை முதல் மாலை வரை, இந்த சரணாலயம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications