பண்ணா நகருக்கு அருகில் அமைந்துள்ளது பண்ணா தேசிய வனவிலங்குப் பூங்கா. இந்தப் பூங்கா, மத்திய பிரதேச மாநிலம், சத்தார்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. மத்தியபிரதேசத்தில் இருக்கும் புலிகள் சரணாயங்களுள் ஐந்தாம் இடத்திலும், தேசிய அளவில் 22 ஆம் இடத்திலும் இருக்கிறது பண்ணா தேசியப் பூங்கா.
இந்தப் பூங்கா, புலிகளுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு மிருகங்களுக்கு அடைக்கலம் தருகிறது. சுற்றுலாத் துறை அமைச்சகம், இந்தப் பூங்காவிற்கு, சிறப்பாக பராமரிக்கப்பட்ட பூங்கா என்ற விருது வழங்கி கௌரவித்துள்ளது.
காடுகளைத் தொன்று தொட்டு அமைந்துள்ள இந்தப் பூங்காவின் இறுதியில் இந்திய கங்கைச் சமவெளியில் இருக்கும் இலையுதிர் காடுகள் அமைந்திருக்கின்றன. இந்தக் காட்டுப் பகுதியில் தேக்கு மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
புலிகளைத் தவிர்த்து, சீத்தல், கரடிகள், சம்பார்ஸ் மற்றும் சிங்க்கார மான் வகைகளைக் காண முடியும். விலங்கினங்கள் மட்டுமல்லாமல் இங்கு பல்வேறு பறவை வகைகளையும் கண்டு ரசிக்கலாம். அவற்றில் பெரிய கழுகுகள், ஹனி பஸ்ஸார்ட், வாத்துக்கள் மற்றும் பரகீத் பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications