பென்ச் சுற்றுலா புகழ் பெற முக்கிய காரணமாக விளங்குகிறது இங்குள்ள பென்ச் தேசிய பூங்கா/பென்ச் புலிகளின் காப்பகம். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா அதன் தாவரவளம் மற்றும் விலங்கின வளத்துக்கு புகழ் பெற்றது. ஜாமுன், டீக், லென்டியா, பலஸ், பிஜா, மஹுவா, குசும், செமல், மூங்கில் போன்ற பல வகையான பூண்டுத்தன்மையுடைய செடி கொடிகளை இங்கு காணலாம். கரடிக்குரங்குகள், புனுகுப் பூனைகள், கரடிகள், மான்கள், புலிகள், காட்டு நாய்கள், பன்றிகள், சிறுத்தைகள் போன்ற பல வகையான விலங்குகள் இந்த பூங்காவில் இருக்கின்றன.
பென்ச் - வரலாற்றுப் பக்கங்களில் இருந்து ஒரு பார்வை!
இந்த பூங்காவிற்கு ஒரு பிரம்மாண்டமான வரலாறு உள்ளது. இந்த இடத்தின் வளமை மற்றும் இயற்கை புதையல்களை பற்றி ஐன்-ஐ-அக்பரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ருட்யர்ட் கிப்லிங் எழுதிய "ஜங்கிள் புக்" என்ற கதையின் இடங்கள் பென்ச் தேசியப் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களை மனதில் வைத்து தான் எழுதப்பட்டது.
பென்ச் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள்
பச்டர் கிராமம், நேவ்கோன் தேசியப் பூங்கா, கன்ஹா தேசியப் பூங்கா, நாக்பூர் மற்றும் நாக்சிரா வழிப்பாட்டிடம் போன்ற அழகிய இடங்களை கொண்டுள்ளது பென்ச் சுற்றுலா. இந்த இடங்கள் அனைத்தும் பென்சுக்கு அருகில் தான் அமையப்பெற்றுள்ளன.
பச்டர் என்ற சின்ன கிராமம் பென்ச் துரியா கேட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே களிமண்ணில் இருந்து மண் பாண்டங்கள் செய்பவர்களை அதிகம் காணலாம். இங்கு செய்யப்படும் கைவினை பொருட்களின் அழகு நம்மை மயங்க வைக்கும். அதனை நம் வீட்டிற்கு வாங்கியும் செல்லலாம்.
பென்ச் தேசிய பூங்காவிற்கு அருகில் பல கிராமங்களை கொண்டுள்ளது பென்ச் சுற்றுலா. இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் காண்ட் பழங்குடியினரின் மரபு மற்றும் பண்பாட்டினை பார்க்க முடியும்.
பென்ச்சிற்கு அருகில் இருக்கும் நேவ்கோன் தேசியப் பூங்கா மற்றும் நாக்சிரா வழிப்பாட்டிடம் மகாராஷ்டிராவில் உள்ள இயற்கை காடுகள் ஆகும். கன்ஹா தேசியப் பூங்கா பென்ச்சிலிருந்து 198 கி.மீ. தொலைவில் உள்ளது.
பென்ச் தேசியப் பூங்கா வருவதற்கு சிறந்த காலம்
சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவிற்கு அக்டோபர் 16-ஆம் தேதியிலிருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை வருகை தரலாம். பருவக்காலத்தில், அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்த பூங்கா மூடியிருக்கும்.
இந்த பூங்காவிற்கு வருகை தர சிறந்த காலமாக கருதப்படுவது பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை. இந்த பூங்கா காலை 6 மணியிலிருந்து 10.30 மணி வரை திறந்திருக்கும். மாலை 3 மணிக்கு மறுபடியும் திறந்து 6 மணிக்கு மூடப்பட்டுவிடும்.
பென்ச்சுக்கு எப்படி எப்போது வருகை தரலாம்?
சுற்றுலாப் பயணிகள் பென்ச்சிற்கு ரயில், விமானம் மற்றும் தரை வழியாகவும் வரலாம். பென்ச்சுக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனி இரயில் நிலையமாகும்.
மிக அருகில் இருக்கும் விமான நிலையம் நாக்பூரில் உள்ள சோனெகோன் விமான நிலையமாகும். சியோனி பேருந்து நிலையம் தான் இதற்கு மிக அருகில் இருக்கும் பேருந்து நிலையம்.
இங்கிருந்து பென்ச்சுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் மூலம் வந்தடையலாம். பென்ச்சுக்கு வருகை தர சிறந்த காலமாக கருதப்படுவது பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை.