பெரன் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பவோன மலைகள் உள்ளன. பென்ரெயூ மலைத்தொடரில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருக்கும் இந்த சிகரம் பெரன் நகரத்திலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
இது நாகாலாந்தின் மூன்றாவது பெரிய மலைச்சிகரமாக உள்ளது. நாகாலந்து மாநிலத்தில் புகழ் பெற்றிருக்கும் பசுமையான கானகங்களை கொண்ட பள்ளத்தாக்கினை இந்த சிகரத்தின் மேலிருந்து காண முடியும்.
மற்றுமொரு பிரபலமான சுற்றுலா தலமான பென்ரெயூ கிராமத்திலிருந்து 6 கிமீ தொலைவில் இந்த இடம அமைந்திருக்கிறது மற்றும் இந்த சிகரத்திற்கு பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் சாகசம் செய்ய வாய்ப்பளிக்கும் மலையேற்றம் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த சிகரப் பகுதிகளை ரோடோடென்ட்ரான், ஆர்கிட் போன்ற பன்வகை தாவர வகைகள் அலங்கரித்துக் கொண்டிருக்கும் வேளையில், மிதுன் காட்டெருமைகள் மற்றும் மாறுபட்ட பறவைகள் ஆகியவை தங்களுடைய இயற்கையான வசிப்பிடங்களாக தேர்ந்தெடுத்து வசித்து வருவதையும் காண முடியும்.
இந்த சிகரத்தைச் சுற்றிலும் இங்கு காலம் காலமாக வசித்து வந்த பழங்குடியினரால் செதுக்கப்பட்ட ஒற்றை கற்கள் நூற்றாண்டுகளை கடந்து நின்று கொண்டிருப்பதையும் காண முடியும். உண்மையான சாகச அனுபவத்தைப் பெற விரும்பினால், இங்கு ஓடிக் கொண்டிருக்கும் சுனைகளில் தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள்.



Click it and Unblock the Notifications