பல முக்கியமான சோழ நாட்டு சுற்றுலாத்தலங்கள் மற்றும் ஆன்மீகஸ்தலங்களுக்கு அருகில் பூம்புகார் நகரம் அமைந்திருப்பதால் சாலை மார்க்கமாக பயணிப்பதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்யும் பயணிகள் வெகு சுலபமாக தங்கள் பயணத்திட்டத்தில் பூம்புகார் நகரத்தையும் இணைத்துக்கொள்ளலாம். குறிப்பாக சீர்காழி மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பூம்புகாருக்கு பேருந்து மார்க்கமாக பயணிப்பது வெகு சுலபம்.