அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் வீர் சாவர்கர் விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மும்பை நகருக்கும், போர்ட் பிளேருக்கும் இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.