காட்டுப் பூக்கள் நிரம்பியிருக்கும் மிகவும் அழகான புல்வெளிகளில் ஒன்றாக பனார் புக்யால் விளங்குகிறது. இந்த இடத்தை அடைவதற்கான 8 கிமீ தூர மலையேற்றப் பாதைகளில் கண்கவரும் காட்சிகளை வழங்கும் இந்த புல்வெளிகள் அமைந்துள்ளன.
சாகர் கிராமத்திலிருந்து இந்த மனதை மயக்கும் புல்வெளிகள் வழியாக மற்றுமொரு மலையேற்றப் பாதையும் சென்று வருகிறது. மேலும், இந்த இடத்திற்கு அருகில் ஒரு நீர்விழ்ச்சியையும் மற்றும் கோவிலையும் கூட சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.