பேருந்துகள் மூலமாகவும் பயணிகள் ருத்ரபிரயாக் நகரை சென்றடையலாம். இது தேசிய நெடுஞ்சாலை எண் 58ன் பாதையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலை டெல்லி மற்றும் பத்ரிநாத் ஸ்தலத்தை இணைக்கின்றது. கோடைக்காலத்தில் டெல்லியிலிருந்து பத்ரிநாத் செல்லும் எல்லா பேருந்துகளும் ருத்ரபிரயாக வழியாக ஜோஷிமடம் ஸ்தலத்தையும் கடந்து செல்கின்றன. ரிஷிகேஷிலிருந்தும் நேரடி பேருந்துகள் ருத்ரபிரயாக் நகருக்கு இயக்கப்படுகின்றன.