துவாரகாமாய் என்பது சமாதி மந்திர் கோயில் வாசலுக்கருகிலேயே இருக்கும் மசூதி ஆகும். தன் இறுதிக்காலம் வரை சாயி பாபா இங்கு தங்கியிருந்துள்ளார்.
துவாரகாமாய் இரண்டு கட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டு பாவாவின் படத்தையும் அவர் காலத்தில் அவர் அமர்வதற்கு பயன்படுத்திய பெரிய கல்லால் ஆன பலகையையும் கொண்டுள்ளது.
இந்த முதல் கட்டு இன்னும் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டு ஒன்றில் அவர் பயன்படுத்திய தேரும் மற்றொன்றில் அவரது பல்லக்கும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டு பாபா குளிப்பதற்கு பயன்படுத்திய கல்லால் ஆன இருக்கையை கொண்டுள்ளது.
மேலும் இந்த மசூதியின் உட்பகுதியை பல வண்ண ஓவியங்களும் அலங்காரப் படுத்துகின்றன. இங்கு வரும் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் இந்த ஓவியங்கள் பெரிதும் கவர்கின்றன.