இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை அறிமுகம் மீண்டும் தாமதமாகிறது. இதன் முதல் மாதிரி ரயில் (prototype) 2027 மார்ச் 31-க்குள் தான் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 2026-லேயே வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப்போயுள்ளதுடன், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் பண்டிகைக் கால பயண திட்டங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய இரவு நேர ரயில் பயணங்களை எதிர்நோக்கியிருந்த பயணிகள், தங்களுடைய 2026-27 பயணத் திட்டங்களை மீண்டும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
லாத்தூரில் உள்ள மராத்வாடா தொழிற்சாலையில் மாதிரி ரயில் தயாரிக்கும் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம். RVNL - TMH கூட்டு நிறுவனமான கினெட் ரயில்வே சொல்யூஷன்ஸ் (Kinet Railway Solutions), வடிவமைப்பு மற்றும் ஒப்புதல் பெறுவதில் தாமதத்தைச் சந்தித்துள்ளது. இதனிடையே, ரயில்வே நிர்வாகம் தனது சொந்த உற்பத்தி பிரிவுகளை நம்பத் தொடங்கியுள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள BEML மற்றும் சென்னையில் உள்ள ICF ஆகிய மையங்களில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வ ஸ்லீப்பர் ரயில் வழித்தடப் பட்டியல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் 2026 வரை தற்போதுள்ள சேர்-கார் (Chair-car) வந்தே பாரத் ரயில்களே முதன்மை தேர்வாக இருக்கும்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் தாமதம்: 2026-27 பயணங்களில் என்ன பாதிப்பு?
தென்னகப் பயணிகளைப் பொறுத்தவரை மூன்று முக்கிய வழித்தடங்களில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. சென்னை - மதுரை, பெங்களூரு - திருவனந்தபுரம் மற்றும் சென்னை - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் இரவு நேர பயணங்களுக்கான தேவை மிக அதிகம். ஆன்மீக சுற்றுலா, துறைமுகங்கள் மற்றும் ஐடி மையங்களை இணைக்கும் இந்த நகரங்களுக்கு பிரீமியம் ரயில்களில் எப்போதுமே அதிகக் கூட்டம் இருக்கும். 2026-ல் புதிய அப்கிரேடுகள் தாமதமாகும் என்பதால், பண்டிகைக் கால கூட்ட நெரிசலை வழக்கமான சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் தேஜஸ் ரயில்களே சமாளிக்க வேண்டியிருக்கும். இதனால் தமிழ்நாடு முழுவதும் ஆன்மீகவாதிகள் மற்றும் வியாபாரிகளுக்கான பெர்த் தேவையும் அழுத்தமும் தொடரும்.
தமிழ்நாடு பயணிகளுக்கான மாற்று ரயில் வாய்ப்புகள்
ஸ்லீப்பர் ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் வரை, ஒரே பாதையில் இயங்கும் தேஜஸ் மற்றும் சதாப்தி ரயில்களைப் பயன்படுத்தலாம். மேலும் பாதுகாப்பான, மென்மையான பயணத்திற்காக பல வழித்தடங்களில் எல்.எச்.பி (LHB) போகி கொண்ட ரயில்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பண்டிகைக் கால கூட்டத்தைச் சமாளிக்க கூடுதல் ஏசி பெட்டிகளையும் ரயில்வே அடிக்கடி இணைத்து வருகிறது. தனியார் நிறுவனங்களின் வடிவமைப்பு தயாராகும் வரை, உள்நாட்டு உற்பத்தியை விரைவுபடுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது ஸ்லீப்பர் ரயில்கள் வருவதற்கு முன்பே இடைக்கால ரயில் வசதிகள் அதிகரிக்கும் என்பதை காட்டுகிறது.
மிகவும் அவசியமானால் மட்டுமே ‘பிரிமியம் தட்கல்’ (Premium Tatkal) முறையைப் பயன்படுத்துங்கள்; ஏனெனில் பயணத் தேதி நெருங்க நெருங்க இதன் கட்டணம் தாறுமாறாக உயரும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயணங்களுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுங்கள் அல்லது வாரத்தின் நடுப்பகுதியில் (Midweek) பயணிக்க திட்டமிடுங்கள். இரண்டாம் கட்ட நகரங்களுக்கான காத்திருப்பு பட்டியலைக் (Waiting List) கண்காணித்து, அருகில் உள்ள வேறு ரயில் நிலையங்களில் இருந்து டிக்கெட் கிடைக்கிறதா என்றும் செக் செய்யலாம். பணத்தைத் திரும்பப் பெறும் வசதிகள் மற்றும் ஆப் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தட்கல் கோட்டா திறக்கும் நேரத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய UPI AutoPay மற்றும் SMS அலர்ட்களை ஆன் செய்து வைப்பது நல்லது.
வந்தே பாரத் ஸ்லீப்பர்: அடுத்தடுத்து என்ன நடக்கும்?
லாத்தூரில் உள்ள மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயிலின் வெளிப்புற கட்டமைப்பு (carbody) முடிவடைவது மற்றும் நிலையான சோதனைகளை (static tests) கவனிப்பது அவசியம். அதேபோல், சென்னை ICF இன்ஜின்களுடன் இணைந்து பெங்களூரு BEML-ல் நடைபெறும் மின்சார இணைப்பு மற்றும் இதர வேலைப்பாடுகளும் முக்கிய கட்டங்களாகும். இதைத் தொடர்ந்து, ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு (RDSO) சார்பில் வேகச் சோதனைகள் நடத்தப்பட்டு, பாதுகாப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும். சோதனை ஓட்டங்கள் அல்லது டிக்கெட் முன்பதிவுக்கு சில வாரங்களுக்கு முன்பே PIB அல்லது ரயில்வே வாரியம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் மாதிரி ரயிலுக்கான புதிய இலக்கு நாள் மார்ச் 2027 ஆகும். எனவே, 2026 பண்டிகைகள் மற்றும் 2027 தொடக்க கால பயணங்களுக்கு, தற்போதுள்ள பிரீமியம் ரயில்கள் மற்றும் கூடுதல் ஏசி பெட்டிகளையே பயணிகள் நம்பியிருக்க வேண்டியிருக்கும். சென்னை - மதுரை, சென்னை - திருநெல்வேலி மற்றும் பெங்களூரு - திருவனந்தபுரம் வழித்தடப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களில் சற்றே நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பது நல்லது. வந்தே பாரத் ஸ்லீப்பர் பணிகள் நடந்து கொண்டிருந்தாலும், அதன் பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் தொடர் உற்பத்தியைப் பொறுத்தே டிக்கெட்டுகள் எப்போது விற்பனைக்கு வரும் என்பது உறுதியாகும்.



Click it and Unblock the Notifications



