ராணா மஹால் படித்துறை, அதன் பெயரே உணர்த்துவது போல், ரஜபுத் தளபதியான உதய்ப்பூரின் மஹாராணாவினால் 1670 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இது தர்பங்கா படித்துறை மற்றும் சௌசையித்தி படித்துறை ஆகியவற்றுக்கு இடையில் தசாஸ்வமேத் படித்துறைக்கு தெற்குப்புறத்தில் அமைந்துள்ளது.
இப்படித்துறை, சிறந்த ரஜபுத் பாணி கட்டுமானத்தை எடுத்துக் கூறும் பிரம்மாண்டமான ஒரு அரண்மனையின் இருப்பிடமாகவும் விளங்குகிறது.
கால ஓட்டத்தில் இவ்வரண்மனை பொலிவிழந்து காணப்பட்டது; ஆனால் உதய்ப்பூரின் ராணா ஜகத் சிங்கினால் செப்பனிடப்பட்டு பழைய பொலிவு திரும்பக் கிடைக்கப்பெற்றுள்ளது.
இப்படித்துறை, ராஜ வம்சத்து பழுப்பு நிற அரண்மனையின் அடியில் அமைந்துள்ளது. இதன் உச்சியில் அமைந்துள்ள நேர்த்தியான கோயில் இதன் முக்கிய ஈர்ப்பாகும்.
2008-2009 வருடத்தைய புனரமைப்பு மற்றும் மறுநிர்மாணத்திற்கான மண்டல சுற்றுலாத் துறையினரால் ஆரம்பித்து நிறைவேற்றப்பட்ட, வாரணாசியின் மறுவாழ்வு என்றழைக்கப்பட்ட புனரமைப்புத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டவற்றுள், இப்படித்துறையும் ஒன்றாகும்.
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும், நீச்சல் கற்றுக்கொள்ளும் பொருட்டு கோடைகாலங்களில் இப்படித்துறையை முற்றுகையிடுகின்றனர். இப்படித்துறையில் இரவு நேரங்களில் பேய்கள் நடமாட்டம் இருப்பதாக ஒரு கதை உலவி வருகிறது.