தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, நாட்டிலேயே அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த பரபரப்பான நகரம் பல கடற்கரைகள், கோவில்கள், மால்கள், பூங்காக்கள், ஷாப்பிங் இடங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே பிரபலம் இல்லை.
1851 ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் சென்னை இலக்கிய சங்கத்தின் 1100 புவியியல் மாதிரிகளுடன் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.
தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள்களை உருவாக்கிய சிறந்த தமிழ் தத்துவஞானியும் கவிஞருமான திருவள்ளுவரின் நினைவாக இது கட்டப்பட்டது.
1640 இல் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை, இந்தியாவில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட முதல் கட்டிடமாகும்.
இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகம், ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1890 இல் கட்டப்பட்டது.
அடையார் ஆற்றின் தெற்கே சுமார் 108 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரந்த வளாகத்தில் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் வகையில் 1875 ஆம் ஆண்டு இந்த தியோசாபிகல் சொசைட்டி நிறுவப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக இருந்த புனித தோமாவின் நினைவாக இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த இடத்தில் 1522 இல் இருந்தே தேவாலயம் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.
விக்டோரியா மெமோரியல் ஹால், டவுன் ஹால் என்றும் அழைக்கப்படுகிறது, இது விக்டோரியா மகாராணியின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.