முதன் முதல் 1848ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் நன்கொடையாக கொடுக்கப்பட்ட இடத்தில் கிரேண்ட் மாஸ்க் கட்டப்பட்டது. பின்னர் பல முறை இந்த மசூதி மறுகட்டுமானம் செய்யப்பட்டது.
1956ஆம் ஆண்டு முதல் முறையாக மறுகட்டுமானம் செய்யப்பட்டு, பின்னர் 1978ஆம் ஆண்டு முற்றிலும் இடிக்கப்பட்டு, இவ்விடத்தில் புதிய மாஸ்க் கட்டப்பட்டது. இந்த மசூதி 1999-2000 ஆம் ஆண்டு இறுதியாக இப்போது இருக்கும் கிரேண்ட் மாஸ்காக உருவெடுத்தது.
இறைவழிபாட்டு நேரத்தில் 200 பேருக்கு இடம் அளிக்கும் அளவுக்கு கொள்ளளவை இந்த மசூதி தற்போது பெற்று இருக்கிறது. பக்ரீத், ரமலான், மிலாது நபி ஆகியவை இந்த மசூதியில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும்.
ஆந்திராவில் இருக்கும் அண்டை ஊர்களாகிய தள்ளரேவு, கொலங்கா, சுங்கர்பாலெம் ஆகிய இடங்களில் இருந்து வேண்டுதல் செய்ய இந்த மசூதிக்கு மக்கள் வருகை தருகிறார்கள். யானத்திற்கு வந்த பிறகு கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடத்தில் இதுவும் ஒன்று.