ஆனந்த பவன் எனும் பெயருக்கு விளக்கமே தேவையில்லை. மகிழ்ச்சி ததும்பிய இல்லம் எனப்படும் இது இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் நேரு வாழ்ந்த மாளிகையாகும்.
தற்போது ஸ்வராஜ் பவன் என்று இதற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சிதிலமாக கிடந்த இந்த மாளிகை முதலில் நேருஜியின் தந்தையான மோதிலால் நேரு அவர்களால் வாங்கப்பட்டிருக்கிறது.
பின்னர் அவர் இம்மாளிகையை புதுப்பித்து ஐரோப்பிய இருக்கைகள் மற்றும் பீங்கான் பொருட்கள் போன்றவற்றை நிரப்பி அக்காலத்தில் ஒரு நாகரிக மாளிகையாக ஆங்கிலேய நாகரிகத்தை ஒத்ததாக உருவாக்கியிருக்கிறார்.
காலப்போக்கில் இந்த மாளைகை சுதந்திரப்போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த அந்நாளைய சிந்தனையாளர்களும் தலைவர்களும் ஒன்று கூடி ஆலோசிக்கும் இடமாக மாறிற்றும்.
சொல்லப்போனால் இந்திய தேசிய விடுதலைப்போராட்டத்தின் அறிவிக்கப்படாத தலைமைச்செயலகமாக இம்மாளிகை திகழ்ந்தது. தற்போது ஒரு நினைவு இல்லமாக வெறுமை வைக்கப்பட்டிருக்கும் இம்மாளிகை ஜவஹர்லால் நேரு மெமோரியல் ஃபண்ட் எனும் அறக்கட்டளை அமைப்பின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்றின் ஒரு முக்கிய சான்றாக வீற்றிருக்கும் இந்த இல்லத்திற்கு சிந்தனையாளர்களும் தேசாபிமானிகளும் விரும்பி விஜயம் செய்கின்றனர்.