சாந்தேரியின் புகழ் பெற்ற இரண்டு கட்டிடங்களான பாலா கிலா மற்றும் குனி தர்வாஸா ஆகியவற்றிற்கு அருகில் ஹத் சால் அமைந்துள்ளது. இது 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
சாந்தேரியிலிருந்த சந்தையின் நினைவுச்சின்னமாகவே ஹத் சால் உள்ளது. பாதசாரிகள் மற்றும் யானையில் செல்பவர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையிலேயே இந்த சந்தைப் பகுதயின் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆறு அடுக்குகளில் ஏறும் வகையில் கடைகள் கட்டப்பட்டுள்ளதால் இந்த சந்தைப்பகுதி உயரமான இடமாக உள்ளது. இதன் மூலம் யானைகளின் மேல் அமர்ந்தபடியே இந்த கடைகளில் பொருட்களை வாங்க முடியும்.
தூண்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடங்கள், ஹத் சால் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றன. ஹத் சால் என்றால் யானைளின் இருப்பிடம் என்று பெயராகும்.
இந்த இடத்தில் அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய தாமரை வடிவமைப்புகள் மற்றும் கம்பி வேலைப்பாடுகள் ஆகியவை செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், ஹத் சாலின் தனித்தன்மை இன்றும் கூட மக்களைக் கவரும் வகையில் உள்ளது.