ஹட்கேஷ்வரி கோயில் ஒரு முக்கியமான ஆன்மீக அம்சமாக ஜுப்பல் சுற்றுலாத்தலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது. புராணக்கதைகளின்படி இக்கோயில் மஹாபாரத பாண்டவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் இது கி.பி 800 மற்றும் 1000 மாவது ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்களால் யூகிக்கப்படுகிறது. பிற்காலத்தில் ஜுப்பல் அரசவம்சத்தினரால் இக்கோயில் புதுப்பிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
கிழக்கத்திய பகோடா கோயில் பாணியில் பல அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடன் இந்த ஹட்கேஷ்வரி கோயில் காட்சியளிக்கிறது. மேலும், ஐந்து இதர தெய்வங்களுக்கான சன்னதிகளும் இந்த கோயில் வளாகத்தில் இடம் பெற்றுள்ளன.
புதுப்பிப்பு செய்யப்படுவதற்கு முன்னர் இருந்த நிலையிலேயே இந்த கோயிலின் மூல விக்கிரகம் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. தினசரி மாலை வேளைகளில் உள்ளூர் பக்தர்களுக்காக இங்கு தீபாராதனைப்பூஜை செய்விக்கப்படுகிறது.