கிழக்கேகரா ஸ்ரீ கிருஷ்ணா கோயில் எனப்படும் இந்த புராதனமான கிருஷ்ணர் கோயில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக நம்பப்படுகிறது. கண்ணூர் நகரத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள சிரக்கல் எனும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
பல நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள இந்த கோயில் வரலாற்றுப்பிரியர்களும் தொல்லியல் வல்லுனர்களும் விரும்பி விஜயம் செய்யும் ஒரு ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. இக்கோயிலில் பாதுகாக்கப்படும் ஏட்டுப்பிரதிகள் 2500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று இந்திய தொல்லியல் துறையினரால் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் மிக அரிதான பால கோபால ரூபத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சியளிக்கின்றார். 5 ஏக்கர் பரப்பளவில் காட்சியளிக்கும் மிகப் பிரம்மாண்டமான சிரக்கல் குளத்துக்கு அருகிலேயே இந்த கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது.
சிரக்கல் ராஜவம்சத்தாரின் குலக்கோயிலாக விளங்கிய இந்த கோயிலில் அன்னதானம் போன்ற முக்கிய சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அமைதியான சூழலையும் தெய்வீக பிரகாசத்தையும் பெற்றுள்ள இந்த ஸ்தலம் பயணிகளின் மனதை சாந்தப்படுத்தி ஆன்மீக சக்தியை அளிக்கும் இயல்புடன் விளங்குகிறது.