சாந்த் பாவ்ரி படிக்கிணற்றுக்கு நேரெதிரில் அமைந்திருக்கும் ஹர்ஷத் மாதா கோயில் 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இந்த ஹர்ஷத் மாதா பெண் தெய்வம் நற்பேறு மற்றும் மகிழ்ச்சியின் கடவுளாக கருதப்படுகிறது.
இதன் காரணமாகவே இங்கு வந்தால் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான பக்தர்கள் ஹர்ஷத் மாதா கோயிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
ஹர்ஷத் மாதா கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் 3 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பக்கத்து கிராமங்களிலிருந்து வணிகர்களும், பக்தர்களும் ஆயிரக்கணக்கில் ஆபானேரி கிராமத்துக்கு வருவார்கள்.
இந்த கோயில் அதன் கல் கட்டமைப்புக்காக மிகவும் பிரசித்தம். இக்கோயில் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.