கல்சுபாய் ஹரிஷ்சந்திரகாட் காட்டுயிர் சரணாலயம் சஹயாத்திரி மலைகள் சூழ அமைந்துள்ளது. அஹமதுநகர் மாவட்டத்தில் அகோலே தாலுக்காவில் இந்த காட்டுயிர் சரணாலயம் உள்ளது.
பலவகையான தாவரங்கள் மரங்கள் மற்றும் காட்டு உயிரினங்கள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன. சண்டாவா, பெஹேடா, ஆவலி, குல்ச்சாவி, கார்வெல், சிரஸ், ஆஷிந்த், பர்ஜாம்புவல், ஹிர்டா போன்ற மரங்கள் இந்த காட்டில் உள்ளன.
வனவிலங்கு ஆர்வலர்கள் இங்கு குள்ள நரி, கழுதைப்புலி, குரைக்கும் மான், மரநாய், இந்திய ராட்சத அணில், கீரி, காட்டுப்பூனை மற்றும் பலவகை பாலூட்டிகள், பறவைகள் ஆகியவற்றை பார்த்து மகிழலாம்.
கலசுபாய் மலைச்சிகரமும் இந்த சரணாலயத்துக்குள் அமைந்துள்ளது. 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் உயரமான சிகரங்களில் ஒன்றாகும்.