அஹமத்நகரிலுள்ள முக்கியமாக சுற்றுலா ஸ்தலங்களில் இந்த கோட் பாக் நிஜாம் என்றழைக்கப்படும் பூங்காத்தோட்டமும் ஒன்று. வெற்றித்தோட்டம் என்றழைக்கப்படும் இந்த பூங்காத்தோட்டம் 1499ம் ஆண்டு மாலிக் அஹமத் என்ற பெயரின் மூலமாகவும் அறியப்படும் அஹமத் நிஜாம் ஷாவினால் கட்டப்பட்டுள்ளது. பாமனி அரசர்களை வெற்றிகொண்டதன் ஞாபகார்த்தமாக அவர் இந்த பூங்காத்தோட்டத்தை நிர்மாணித்துள்ளார்.
மன்னர் அஹமது ஷா தன் அரசின் கேந்திரத்தை ஜுன்னார் நகரத்திலிருந்து அஹமத் நகர் என்ற புதிய நகருக்கு மாற்ற முடிவு செய்து இந்த புதிய நகரத்துக்கான அடிக்கல்லை 1494ம் ஆண்டு சினா ஆற்றின் கரையில் நாட்டினார்.
அச்சமயம் அவர் தௌலாபாத் கோட்டையை கைப்பற்றி பாமனி அரசை அழித்தார். இது இந்த பூங்காதோட்டம் தொடர்பான வரலாற்று பின்னணியாகும்.பின்னர் இந்த பாக் நிஜாம் பூங்கா தோட்டத்தை சுற்றிலும் உயரமான சுவரையும் அவர் எழுப்பியுள்ளார். அதுவே இப்போது அஹமத் நகர் கோட்டையாகவும் விளங்குகிறது.