வருடம் முழுவதுமே பக்தர்களின் நடமாட்டத்துடன் இந்த ஹிரண்யகேஷி கோயில் காணப்படுகிறது. பார்வதி தேவி இந்த கோயிலில் ஹிரண்யகேஷி எனும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த கோயிலில் சிவனின் சிலையையும் பக்தர்கள் பார்க்கலாம்.
ஹிரண்யகேஷி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஸ்தலம் தியானத்துக்கு உகந்த இடமாக அறியப்படுவதோடு மீன் பிடித்தல் போன்ற பொழுது போக்குகளில் ஈடுபடவும் வசதியாக உள்ளது. இந்த கோயிலைச்சுற்றிலும் உள்ள இயற்கை எழில் அம்சங்கள் பயணிகளை மிகவும் கவரும் வகையில் உள்ளன.