கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில், அந்தர்கங்கே குன்றுகளில் மீது அந்தர்கங்கே குகைகள் அமைந்திருக்கின்றன. அந்தர்கங்கேயின் குகைகள் எரிமலை சீற்றத்தால் வெடித்து சிதறிய சிறிய சிறிய பாறைகளால் உருவானது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் பெரிய மற்றும் சிறிய பாறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து குகை போன்ற வடிவமாய் உருவாகின. அந்தர்கங்கேயின் சில குகைகள் சிறியதாகவும், குறுகியும் காணப்படுவதால் பயணிகள் அதனுள்ளே ஊர்ந்துதான் செல்ல முடியும். இந்த காரணத்துக்காகவே சாகசத்தின் மீது தீராத தாகம் கொண்ட பயணிகள் இங்கு படை எடுத்து வருவது போல் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
அந்தர்கங்கேயில் குகைகளை தவிர பழமையான கோயில்களுக்கும்,வேறு சில ஆன்மீக ஸ்தலங்களுக்கும் பயணிகள் செல்லலாம். அந்தர்கங்கே பெங்களூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நடைபயணம் செல்வது, குன்றுகளிலிருந்து கயிறு மூலமாக கீழிறங்குவது, கயிறுகளில் தொங்கிக் கொண்டு செல்வது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு பொழுதை களிக்கலாம்.
அந்தர்கங்கேயில் உள்ள இயற்கை நீரூற்றுகளை காணவும், இதமான வெப்பநிலைக்காகவுமே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் ஆண்டு தோறும் அந்தர்கங்கேயை தேடி வருகின்றனர்.